search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    வேப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா, இறந்து விட்டார். இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகாலட்சுமி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×