என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
புதுச்சேரி:
புதுவையில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுவை பெரிய கடை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணன் (வயது 48).
இவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு காணப்பட்டது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கண்ணன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை மேற் கொண்டு வருகிறார்.
இதே போலீஸ் நிலையத்தில் கடந்த 14-ந் தேதி 33 வயது போலீஸ்காரர் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.
மேலும் பெரியகடை போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்