search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தபோது எடுத்த படம்.
    X
    கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தபோது எடுத்த படம்.

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று புதிதாக 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது.

    இதில் 15 ஆயிரத்து 292 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 19 பேர் குணமடைந்தார்கள். தற்போது 607 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்து விட்டது.

    கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வீதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், “ஈரோடு மாநகராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஒரே தெருவில் 3-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று ஏற்பட்டு இருந்தால் அந்த பகுதியை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். கருங்கல்பாளையம் சேக்கிழார் தெருவில் 3 குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்”, என்றார்.
    Next Story
    ×