search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பள்ளிக்கூட ஆசிரியை உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட ஆசிரியை உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக 52 வயதுடையவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தற்போது கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஆசிரியை உள்பட ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 831 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று மாவட்டத்தில் மொத்தம் 9 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

    இதுவரை கொரோனா வைரசுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 445 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×