search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் தகராறில் ஜோதிடர் அடித்துக்கொலை

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் தகராறில் ஜோதிடர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் மல்லியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி மல்லிகா (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார்.

    இதேபோல் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் பழனிசாமி (57). இவரிடம் மல்லிகா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று உள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து ஜோதிடர் பழனிசாமி அடிக்கடி மல்லியூர் பகுதியில் உள்ள மல்லிகா வீட்டிற்கு வரத்தொடங்கினார். இதை பிடிக்காத மல்லிகாவின் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மல்லிகாவையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு நீடித்தது.

    மல்லிகாவின் உறவினர்கள் ஜோதிடர் பழனிசாமியை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி அவரும் அங்கு வந்தார். இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மல்லிகாவின் உறவினர்கள் சென்னாநாயக்கர், கோவிந்தன், சூரிய பிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகியோர் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை தாக்கினர். இதையடுத்த அவர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அனைவரையும் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகாவின் உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை கல்லால் முகத்தில் அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் இதுப்பற்றி தெரியவந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தி குத்தில் காயம் அடைந்த 6 பேரையும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஜோதிடர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×