search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பேரிகை அருகே புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை

    பேரிகை அருகே புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே குடிசாதனப்பள்ளி பக்கமுள்ள நெரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 24), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனை, அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மனோகர் இறந்து விட்டார். இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×