search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோப்பு வெங்கடாச்சலம்
    X
    தோப்பு வெங்கடாச்சலம்

    பெருந்துறையில் வாக்குச்சாவடியில் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம்

    சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பெருந்துறை:

    பெருந்துறை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலம் பொன்முடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.

    அப்போது தனது பெயர் சின்னம் 2-வது மின்னணு எந்திரத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2-வது எந்திரத்தை முதலாவதாக வைத்து விட்டனர் என்று கூறி வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

    இது பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர்.

    சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×