என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறையில் வாக்குச்சாவடியில் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம்
பெருந்துறை:
பெருந்துறை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலம் பொன்முடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.
அப்போது தனது பெயர் சின்னம் 2-வது மின்னணு எந்திரத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2-வது எந்திரத்தை முதலாவதாக வைத்து விட்டனர் என்று கூறி வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இது பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர்.
சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்