என் மலர்
செய்திகள்

கோடை வெயில்
வேலூரில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம்
வேலூரில் வெயில் தாக்கம் நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி கொளுத்தியது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, மார்ச் மாதம் பிற்பகுதியில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்.
இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக சுமார் 100 டிகிரி வெயில் அளவை நெருங்கியபடி பதிவாகி இருந்தது.
இந்நிலையில், நேற்று 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி என்று தொடங்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும்.
ஆனால், நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி கொளுத்தியது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தற்போது தான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியுள்ளது.
அதிகப்படியான வெயில் தாக்கத்தால் நேற்று பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. மாலை நேரத்தில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
ஏப்ரல் 3-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் இன்னும் வரும் நாட்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, மார்ச் மாதம் பிற்பகுதியில் தொடங்கி மே மாதம் இறுதிக்குள் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும்.
இந்த ஆண்டில் கடந்த ஒரு வாரமாக சுமார் 100 டிகிரி வெயில் அளவை நெருங்கியபடி பதிவாகி இருந்தது.
இந்நிலையில், நேற்று 106.3 டிகிரி வெயில் பதிவானது. வழக்கமாக 100 டிகிரி என்று தொடங்கும் வெயில் அளவு போகப்போகத்தான் அதிகரிக்கும்.
ஆனால், நேற்று 100 டிகிரியை கடந்து 106.3 டிகிரி கொளுத்தியது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மார்ச் மாதத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது தற்போது தான் முதல் முறையாகும். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியுள்ளது.
அதிகப்படியான வெயில் தாக்கத்தால் நேற்று பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. மாலை நேரத்தில் வீடுகளில் புழுக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
ஏப்ரல் 3-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் இன்னும் வரும் நாட்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Next Story






