என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்டத்தில் தொற்று அதிகரிப்பு- தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்27 March 2021 9:37 AM GMT (Updated: 27 March 2021 9:37 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க சுகாதார குழுவினர் முகாமிட்டு காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீலகிரியில் தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க சுகாதார குழுவினர் முகாமிட்டு காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீலகிரியில் தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X