என் மலர்
செய்திகள்

கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆவூரில் இருந்து துரைக்குடி செல்லும் சாலையில் வந்த ஒரு மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியில் உள்ள கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய சாமிஊரணிபட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 27) என்பவரை கைது செய்தனர்.
Next Story






