search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம்
    X
    முககவசம்

    முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தா.பழூர்: 

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் காரைக்குறிச்சி ஊராட்சி தலைவர் கவிதா, துணை வட்டார வளர்ச்சி  அலுவலர் தனவேல், ஊராட்சி செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில்  வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 9 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×