என் மலர்
செய்திகள்

தற்கொலை
சூளகிரி அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை
சூளகிரி அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
உத்தரகாண்ட் மாநிலம் ஹவேலி தாகரா நகர் குமரவாலா நரோலி கிராமத்தை சேர்ந்தவர் பகவான்ஜா (வயது 41). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொட்ரப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






