search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

    புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 20-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மார்ச் 22 முதல் மே 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். 

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×