search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி ஆணையர்
    X
    சென்னை மாநகராட்சி ஆணையர்

    கொரோனா அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்- மாநகராட்சி ஆணையர்

    சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

    * சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

    * கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது.

    * சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது.

    * சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    * லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×