search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழைத்தார்கள்
    X
    வாழைத்தார்கள்

    வாழைத்தார்கள் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

    வாழைத்தார் விலை சற்று உயர்ந்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நொய்யல்:

    நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கொங்கு நகர், கோம்புப்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன் வாழை, ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவள்ளி, மொந்தன் உள்பட பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    இப்பகுதிகளில் நன்கு விளைந்த வாழைத்தார்கள் கூலிஆட்கள் மூலம் வெட்டப்பட்டு உள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கும், அருகில் பரமத்தி வேலூரில் செயல்படும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. மேலும், லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.250-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ-350-க்கும், ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350-க்கும், பச்சை நாடன் வாழைத்தார் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. வாழைத்தார் விலை சற்று உயர்ந்ததால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×