என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஓசூரில் வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
ஓசூரில் வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமீத் (வயது 26). இவர் ஓசூரில் காமராஜ் நகரில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அமீத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த அமீத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






