என் மலர்
செய்திகள்

கொரோனா தடுப்பூசி
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
வண்டலூர்:
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வண்டலூர் தாசில்தாரும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலருமான டி.ஆறுமுகம் மற்றும் அவருடன் தேர்தல் பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்பட 150 பேர் நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதேபோல வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் வண்டலூர் தாசில்தாரும் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலருமான டி.ஆறுமுகம் மற்றும் அவருடன் தேர்தல் பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் உள்பட 150 பேர் நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். இதேபோல வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.
Next Story






