search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    கந்தர்வகோட்டை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகிலுள்ள குளத்தூர் நாயக்கர் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவர் தனது சொந்த வேலை காரணமாக அருகிலுள்ள தட்டமனை பட்டி கிராமத்திற்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நடுப்பட்டி கிறிஸ்துராஜா பள்ளி அருகில் வந்த போது, மோட்டார் சைக்கிளை அந்த வழியாக வந்த டிராக்டர் முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×