search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

    ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகில் உள்ள பாத்தம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் உள்ள ரோஜா நகரில் கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தவறுதலாக அவரது கை மின்கம்பியில் பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×