search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் தகவல்

    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி போன்ற வழிமுறைகளை வாக்காளர்கள் கடைப்பிடித்து வாக்களிக்கும் பொருட்டு வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணைய அறிவுரைப்படி நீலகிரியில் 683 வாக்குச்சாவடிகளில் இருந்து 868 வாக்குச்சாவடிகளாக உயர்ந்து உள்ளது.

    வழக்கமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு நபர் வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை கண்டறிய தெர்மல் ஸ்கேனர் மேற்கொள்ளவும், மற்றொரு நபர் வாக்காளர்களுக்கு கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்குவதற்காகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி ஆசிரியர்கள் 2,600 பேர், கல்லூரி பேராசிரியர்கள் 250 பேர் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் 4,167 பேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிற வாரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4,167 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அவர்களுக்கு முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்துவதற்கான தடுப்பு மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இதற்காக 15 மையங்கள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×