என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே 16 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்3 March 2021 8:25 AM GMT (Updated: 3 March 2021 8:25 AM GMT)
மதுரை அருகே 16 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை திருப்பாலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்கான். இவரது மனைவி ரூபினா (வயது 27). சம்பவத்தன்று கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் திருப்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 16 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை திருப்பாலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்கான். இவரது மனைவி ரூபினா (வயது 27). சம்பவத்தன்று கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வீட்டிற்கு வந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் திருப்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 16 பவுன் நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X