search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்- அமித்ஷா

    புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
    காரைக்கால்:

    காரைக்காலில் இன்று பாஜக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    * காங்கிரஸில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் கட்சி காணாமல் போகும்.

    * ஊழலை மட்டுமே வளர்த்தது நாராயணசாமி தலைமையிலான அரசு. புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் எதையும் காங்கிரஸ் செயல்படுத்தவில்லை.

    * புதுச்சேரியில் அடுத்து பா.ஜ.க. அணியின் ஆட்சி அமையும்.

    * உலகின் உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என வருத்தப்படுகிறேன்.

    * பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு பேச ஆசைப்படுகிறார்; நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×