என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாங்காடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவர் கைது
Byமாலை மலர்27 Feb 2021 3:41 PM GMT (Updated: 27 Feb 2021 3:41 PM GMT)
மாங்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி:
மாங்காடு அருகே வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக மாற்றுத்திறனாளியாக ஆனார். இந்த நிலையில் அவரது தாயார் நேற்று முன்தினம் மகளை வீட்டில் பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே பெண் வீட்டில் யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு, அருகில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து (வயது 36), என்பவர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து தன்னை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது தாயிடம் சைகை மூலம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி, டிரைவர் முத்துவை பிடித்து விசாரணை செய்தபோது, மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டுக்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X