search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சரக்கு ரெயில் மோதி முதியவர் பலி

    சரக்கு ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மாயனூர்- வீரராக்கியத்திற்கும் இடையே வந்தபோது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×