search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேளாங்கண்ணி அருகே முதியவர் தற்கொலை

    வேளாங்கண்ணி அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தச்சர் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது64). இவர் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து. தகவல் அறிந்த கீழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×