என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூரில் நகை திருடிய பெண் கைது
Byமாலை மலர்27 Feb 2021 11:01 AM GMT (Updated: 27 Feb 2021 11:01 AM GMT)
திருச்செந்தூரில் நகை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் சென்னையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பாலமுருகன் வந்தார். பின்னர் மாசி திருவிழா பார்க்க தனது தாயார் மற்றும் சித்தி ஆகியோருடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சித்தியின் கழுத்தில் இருந்த செயின் அறுந்துவிட்டதால் உடனே அதை காகிதத்தில் மடித்து பாலமுருகன் தனது சட்டை பையில் வைத்துள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பாலமுருகன் சட்டை பையில் தங்க செயினை, கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மனைவி கனி என்ற மல்லிகா (30) திருடினார். அப்போது பாலமுருகன், மல்லிகாவை கையும் களவுமாக பிடித்தார்.
இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கனி என்ற மல்லிகாவை கைது செய்தனர்.
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் சென்னையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பாலமுருகன் வந்தார். பின்னர் மாசி திருவிழா பார்க்க தனது தாயார் மற்றும் சித்தி ஆகியோருடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சித்தியின் கழுத்தில் இருந்த செயின் அறுந்துவிட்டதால் உடனே அதை காகிதத்தில் மடித்து பாலமுருகன் தனது சட்டை பையில் வைத்துள்ளார்.
இந்நிலையில் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பாலமுருகன் சட்டை பையில் தங்க செயினை, கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மனைவி கனி என்ற மல்லிகா (30) திருடினார். அப்போது பாலமுருகன், மல்லிகாவை கையும் களவுமாக பிடித்தார்.
இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கனி என்ற மல்லிகாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X