search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்செந்தூரில் நகை திருடிய பெண் கைது

    திருச்செந்தூரில் நகை திருடிய பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் சென்னையில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பாலமுருகன் வந்தார். பின்னர் மாசி திருவிழா பார்க்க தனது தாயார் மற்றும் சித்தி ஆகியோருடன் திருச்செந்தூர் சென்றார். அங்கு சித்தியின் கழுத்தில் இருந்த செயின் அறுந்துவிட்டதால் உடனே அதை காகிதத்தில் மடித்து பாலமுருகன் தனது சட்டை பையில் வைத்துள்ளார்.

    இந்நிலையில் திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பாலமுருகன் சட்டை பையில் தங்க செயினை, கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவரின் மனைவி கனி என்ற மல்லிகா (30) திருடினார். அப்போது பாலமுருகன், மல்லிகாவை கையும் களவுமாக பிடித்தார்.

    இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கனி என்ற மல்லிகாவை கைது செய்தனர்.



    Next Story
    ×