என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 1,300 டன் அரிசி ஈரோட்டுக்கு வந்தது
Byமாலை மலர்26 Feb 2021 9:17 AM GMT (Updated: 26 Feb 2021 9:17 AM GMT)
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.
ஈரோடு:
பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புழுங்கல் அரிசியை தெலுங்கானா மாநிலம் கரிம் நகர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 21 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1,300 டன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட அரிசி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
பொது வினியோக திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அந்த பொருட்கள் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
இந்த நிலையில் பொது வினியோக திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான புழுங்கல் அரிசியை தெலுங்கானா மாநிலம் கரிம் நகர் பகுதியில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரெயில் மூலம் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 21 பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட 1,300 டன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள். பின்னர் லாரியில் ஏற்றப்பட்ட அரிசி ஈரோடு மூலப்பாளையம் மற்றும் பவானி ரோட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X