search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி கரி பூசுவோம்- திருமாவளவன்

    தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை ஆட்சி கவிழ்ப்பை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசினார். அவர் பேசியதாவது:-

    மக்களால் தேர்வு செய்த அரசை நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பா.ஜனதா கவிழ்த்துள்ளனர். அநாகரீக அரசியலை அரங்கேற்றி வருகின்றனர்.

    பா.ஜனதாவின் அருவறுப்பான, அராஜகமான, கேவலமான அரசியலை நாராயணசாமி எடுத்துரைத்தார்.

    தேசத்தை பிடித்திருக்கும் பெரும் தீங்கு பா.ஜனதா. கொரோனாவை விட பா.ஜனதா கொடிய நோய். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர்.

    ஒரு வகையில் காங்கிரசுக்கு பா.ஜனதா நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். புதுவை மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்தார் என ஆட்சியை கவிழ்த்தார்கள்?.

    தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தது துரோகமா? மக்களால் தேர்வு செய்த அரசை கலைக்க இவர்கள் யார்? என்.ஆர்.காங்கிரஸ் முகத்தில் தற்போதுதான் வெளிச்சம் விழுந்துள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவந்துள்ளது.

    பா.ஜனதாவின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. துணை சென்றுள்ளது. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் ஓட்டுக்கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் விரட்டியடிக்க வேண்டும்.

    காங்கிரசுக்கு, கூட்டணிக்கு செய்த துரோகத்தை விட புதுவை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர். பா.ஜனதா விரித்த வலையில் 5, 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்யவேண்டும்.

    இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா சிதைத்துக் கொண்டிருக்கிறது. சாதி வெறியை தூண்டுகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது. எதையும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும்? என்ற அநாகரீமாகன, அறுவருப்பான செயலை செய்யவும் தயாராக உள்ளனர்.

    புதுவை அரசை கலைத் திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தால் அதனையும் கலைக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை போல பார்க்கிறோம்.

    ஆனால் தமிழகத்தில் பா.ஜனதா முயற்சி, கனவு பலிக்காது. சில தக்குறுதிகள் வேண்டுமானால் பா.ஜனதாவுக்கு துணை செல்லலாம். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கைகோர்த்து நிற்கிறது.

    தமிழகத்தில் பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டி அடிப்போம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். இது கூட்டணி அரசியல் அல்ல, சமூகநீதியை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.

    இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதுவையில் நடைபெறும் போரட்டங்களில் பங்கேற்று வருகிறது. நாராயணசாமி ஆட்சியை பறிகொடுத்திருக்கலாம்.

    ஆனால் மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×