என் மலர்
செய்திகள்

மரணம்
கொள்ளிடம் அருகே ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
கொள்ளிடம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை வைரவனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது32). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பழவனாற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி ஆற்றில் விழுந்து மூழ்கி மாயமானார்.
இது குறித்து சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 1½ மணி நேரம் தேடுதலுக்கு பிறகு கணேசன் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொள்ளிடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






