search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சீர்காழியில் டிராக்டர் மோதி முதியவர் பலி

    சீர்காழியில் டிராக்டர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பி.எம்.ஆர். தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 60). இதேபோல் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (34) இருவரும் தனித் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது தமிழிசை மூவர் மணிமண்டபம் எதிரே இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். அப்போது ஜீவானந்தம் அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த வெங்கடேசன் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×