search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

    கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கருக்கனஅள்ளியை சேர்ந்தவர் வேலன். இவரது மகன் பிரதீஷ் (வயது 5). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வந்தான். சம்பவத்தன்று கிருஷ்ணகிரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிறுவன் பிரதீஷ், ஆலப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×