என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.வி.குப்பம் அருகே கணவன் வேறு திருமணம் செய்ததால் பெண் தற்கொலை
Byமாலை மலர்20 Feb 2021 10:48 AM GMT (Updated: 20 Feb 2021 10:48 AM GMT)
கே.வி.குப்பம் அருகே கணவன் வேறு திருமணம் செய்ததால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் தாலுகா, நாகல் அடுத்த தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஆட்டோடிரைவர். இவருடைய மனைவி பார்வதி (வயது 26). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் வேறுஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் முதல் மனைவி பார்வதியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் பார்வதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பார்வதியின் சாவில் மர்மம் உள்ளதாக அவருடைய தந்தை கோதண்டன் கே.வி.குப்பம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X