என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சீர்காழி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    சீர்காழியில் கணவர் மதுகுடித்து வந்ததால் மனவேதனை அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் ரகுவீர் (வயது 35). இவருக்கும் திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புவனேஸ்வரி (32) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ரகுவீர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி புவனேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புவனேஸ்வரியின் தாயார் மகாலட்சுமி சீர்காழிக்கு வந்து கணவன்-மனைவியை சமாதானம் செய்து விட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் ரகுவீர் நேற்று முன்தினம் மீண்டும் மதுகுடித்து விட்டு வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி, இரவில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இவர் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணன் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×