என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Feb 2021 3:09 PM GMT (Updated: 16 Feb 2021 3:09 PM GMT)
மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் வட்ட மாட்டுவண்டி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்தது. இதற்கு வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏதுவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஜெயகுரு, தனசேகர், வைத்தியநாதன், மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து, தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X