என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்14 Feb 2021 3:39 AM GMT (Updated: 14 Feb 2021 3:39 AM GMT)
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
லாஸ்பேட்டை 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஞானம் (வயது 54). தனியார் நிறுவன ஊழியர். கொரோனா ஊரடங்கு காரணமாக போதுமான வருமானமின்றி சிரமப்பட்டு வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானம், நீண்ட நேரமாக திரும்ப வரவில்லை. குடும்பத்தினர் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் பாகூர் அடுத்த அரங்கனூரில் தனக்கு சொந்தமான காலி மனையில் உள்ள கொட்டகையில் ஞானம் தூக்கில் பிணமாக தொங்குவதாக தகவல் அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தெரிந்ததும் பாகூர் போலீசார் அங்கு சென்று ஞானத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொரோனாவால் வருமானம் இழந்த ஞானம், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X