என் மலர்
செய்திகள்

விபத்து பலி
ஓசூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
ஓசூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் வெங்கடேஷ் நகரை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 32). தச்சு தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில், ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங்ரோட்டில சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் பிரவீன்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரவீன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






