search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை- 2 பேர் கைது

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்தி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொள்ளுர்பட்டி தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (43), அண்ணாமலை என்ற மகாலிங்கம் (33). இவர்கள் 3 பேரும் கூலித்தொழிலாளிகள்.

    சம்பவத்தன்று சிவலிங்கம் அவரது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு அண்ணாமலை வந்து சிவலிங்கத்தை கூப்பிட்டார். உடனே சிவலிங்கம் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கிருந்த வெள்ளைச்சாமி ஓடிவந்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சிவலிங்கத்தின் தலையில் தாக்கினார். இதையடுத்து மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி விட்டனர்.

    சிவலிங்கத்தின் அலறல் கேட்டு அவரது மகன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். அப்போது சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் (49) நகர போலீஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி, அண்ணாமலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×