என் மலர்
செய்திகள்

தற்கொலை
மத்தூர், காவேரிப்பட்டணம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
மத்தூர், காவேரிப்பட்டணம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கலர்பதி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் தமிழ்செல்வன் (வயது 20). வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். மாணவர் தமிழ்செல்வன் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று தமிழ்செல்வன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள காவகட்டிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






