search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது

    பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீசார் எ.டி.முதுகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய களிச்சேரி கோவிந்தராஜ் (வயது 29), எ.டி.ஒன்னுப்பள்ளி வெங்கடசாமி (39), அலேநத்தம் கோபி (37), ரங்கப்பா (33), பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாலாஜி (28), மாதேஷ் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல், தேன்கனிக்கோட்டை போலீசார், சந்தனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எஸ்.காருபட்டி வெங்கடேஷ் (45), அரதகூர் பீமன் (27), லக்கசந்திரம் நாகேஷ் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×