என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு
Byமாலை மலர்7 Feb 2021 11:19 PM GMT (Updated: 7 Feb 2021 11:19 PM GMT)
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மூலக்குளம்:
புதுவை ரெட்டியார்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கீழ்தள கதவின் பூட்டினை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. அருண்குமார் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் படுத்திருந்ததை அறிந்து, மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் திருட்டு நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை ரெட்டியார்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கீழ்தள கதவின் பூட்டினை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. அருண்குமார் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் படுத்திருந்ததை அறிந்து, மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் திருட்டு நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X