search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருட்டு

    தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மூலக்குளம்:

    புதுவை ரெட்டியார்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டு மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கியுள்ளார்.

    இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கீழ்தள கதவின் பூட்டினை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து கீழே வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. அருண்குமார் குடும்பத்துடன் வீட்டின் மாடியில் படுத்திருந்ததை அறிந்து, மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    மேலும் திருட்டு நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×