search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    பிற வகுப்புகளையும் திறக்க ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

    9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாளை 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பிற வகுப்புகளையும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    இந்தியளவில் பள்ளிக்கல்வித்துறை 3-வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளது.

    தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தை செலுத்தினால் தான் பொதுத்தேர்வை எழுத அனுமதிப்போம் என்று பள்ளிகள் கட்டாயப்படுத்தினால் அது குறித்து பெற்றோர்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×