என் மலர்
செய்திகள்

காங்கிரஸ்
நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் கட்சி மனித உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ரபீக் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story






