search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பவானி அருகே மொபட் திருடியவர் கைது

    பவானி அருகே மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் நித்தியானந்தன் (வயது 33). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் காலிங்கராயன்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு வந்து பார்த்தபோது அவருடைய மொபட்டை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசில் அவர் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று பவானி காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு பகுதியில் தனது ெமாபட்டுடன் நின்று கொண்டிருந்தவரை நித்தியானந்தன் பிடித்து சித்தோடு போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் ஜம்பை பகுதிைய சேர்ந்த ரவி (30) என்பதும், அவர்தான் நித்தியானந்தனின் மொபட்டை திருடி சென்றதும்,’ தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து ரவியை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×