search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஈரோட்டில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    ஈரோட்டில் நோயால் பாதிக்கப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சீனிவாசன் ஈரோடு பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×