என் மலர்
செய்திகள்

கொள்ளை
ஓசூரில் டாக்டர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு
ஓசூரில் டாக்டர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் தர்கா அருகே சமாதானபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 39). டாக்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்றார். அப்போது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், வீட்டில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை திருடி சென்றனர். இந்த நிலையில் ஊருக்கு திரும்பிய நவீன்குமார் நகைகள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story






