என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகை அருகே ரெயிலில் அடிபட்டு விவசாயி பலி- போலீசார் விசாரணை

    நாகை அருகே ரெயிலில் அடிபட்டு விவசாயி பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    நாகை அருகே சிக்கல் ஆவராணி ரெயில்வே கேட் அருகே உள்ள ஒத்தகை காட்டி அருகே நேற்று காலை 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக சிக்கல் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று பார்வையிட்டு, நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் நாகை சட்டையப்பர் மேலவீதியை சேர்ந்த விவசாயியான ரமே‌‌ஷ்பாபு (வயது59) என்பது தெரியவந்தது. மேலும் இவர், மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்தில் ஏற்பட்ட ந‌‌ஷ்டத்தால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ரமே‌‌ஷ்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து ஆவராணி ரெயில்வே கேட் பகுதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த நேரத்தில் வந்த எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி நாகை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரமே‌‌ஷ்பாபுவுக்கு அமுதா என்ற மனைவியும், அரவிந்த், ஹரி‌‌ஷ்கிரு‌‌ஷ்ணா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×