search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பேரணாம்பட்டு அருகே தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

    பேரணாம்பட்டு அருகே தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு:

    குடியாத்தம் தாலுகா அனங்காநல்லூரை அடுத்த கோப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 70), தேங்காய் வியாபாரி. இவர், கடந்தசில நாட்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வளத்தூர் கிராமத்துக்கு தேங்காய் விற்க சென்றபோது, வளத்தூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×