search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி
    X
    அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி

    தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது- அமைச்சர் பேச்சு

    தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

    ராஜபாளையம்:

    எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்தி ரபாலாஜி பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தை துடிப்போடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சியில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு கரண்டு கட்டே இல்லை. அ.தி.மு.க. தமிழுக்காக, வாழ்கின்ற கட்சி.

    தி.மு.க.வும், காங்கிரசும் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நாங்கள் தான் தமிழ் கலாச்சாரத்தை தாங்கி பிடிக்கிற இயக்கம் என கூறுகின்றனர். இதை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்த கட்சி காங்கிரஸ். அதனை மீட்ட கட்சி அ.தி.மு.க. என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

    தி.மு.க. ஆட்சியை மக்கள் மறந்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கின்றார். தேர்தல் வரட்டும், தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க. எழுச்சியோடு தேர்தலை எதிர்நோக்கி செல்கிறது.

    தை பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் அலை, அ.தி.மு.க. அலை வீசுகின்றது. அ.தி.மு.க. வேட்பாளர் யாராக இருந்தாலும், இரட்டை இலை சின்னத்தில் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×