search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிவகங்கை அருகே தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

    திருட்டு மணல் அள்ளுவது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கருதி தலையாரியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த வாணியங்குடியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 40). இவர் பெரியகோட்டை வழுதாணி கிராம தலையாரி ஆக இருக்கிறார். சம்பவத்தன்று இரவு பாண்டி தாலுகா அலுவலகத்தின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (33) என்பவர் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். பாண்டியிடம் அவர்கள், சிவா மணல் அள்ளுவதை அதிகாரிகளுக்கு நீதான் தகவல் கொடுக்கிறாயா? என்று கேட்டு தகராறு செய்தனர். திடீரென்று அவர்கள் பாண்டியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி சிவா உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சிவா, அஜித் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×