என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடுவூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்18 Jan 2021 3:14 PM GMT (Updated: 18 Jan 2021 3:14 PM GMT)
வடுவூர் அருகே மோட்டார் சைக்கிள் சாலையோர பனை மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருநாட்டியத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கவியரசன் (வயது28). டிப்ளமோ படித்த இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம்மூர்த்தி (30) என்பவருடன் கோயம்புத்தூருக்கு சென்று மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி கொண்டு 14-ந் தேதி திரும்பி கொண்டிருந்தார்.
வடுவூர் அருகே உள்ள காரக்கோட்டை எனும் இடத்தில் அதிகாலை இவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையோர பனை மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கவியரசன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கவியரசன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X