search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வடுவூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    வடுவூர் அருகே மோட்டார் சைக்கிள் சாலையோர பனை மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    வடுவூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள திருநாட்டியத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் கவியரசன் (வயது28). டிப்ளமோ படித்த இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர் மாங்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம்மூர்த்தி (30) என்பவருடன் கோயம்புத்தூருக்கு சென்று மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி கொண்டு 14-ந் தேதி திரும்பி கொண்டிருந்தார். 

    வடுவூர் அருகே உள்ள காரக்கோட்டை எனும் இடத்தில் அதிகாலை இவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிள் சாலையோர பனை மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கவியரசன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கவியரசன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×